ஸ்ரீமூலநாதர் திருக்கோயில், கீழத்தஞ்சாவூர்- தல வரலாறு- பாடல் பெற்ற தலம் இல்லை

 

நமது யூடியூப் சேனலை சப்ஸ்கரைப் செய்து கொள்ளுங்கள்

இந்த திருக்கோயில் படங்களை பார்க்க அதன் மேல் Swipe செய்யவும்.

இறைவர் திருப்பெயர்: ஸ்ரீ மூலநாதர்.
இறைவியார் திருப்பெயர்: அகிலாண்டேஸ்வரி.
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
வழிபட்டோர் : செருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார் மற்றும் இவர் தம் அரசியார்.,
தேவாரப் பாடல்கள் :- - வைப்புத்தலம்

இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

143வது தேவார வைப்புத்தலம்.


மருகல் நாட்டுத் தஞ்சை எனப்படுவது இத்தலமேயாகும். தற்போது இத்தலம் கீழத்தஞ்சாவூர் என்று வழங்குகிறது.

ஸ்ரீசெருத்துணை நாயனாரின் அவதார மற்றும் முக்தித்தலம்.
அவதாரத் தலம் : மருகல் நாட்டுத் தஞ்சாவூர் (கீழைத்தஞ்சாவூர்)
வழிபாடு : இலிங்க வழிபாடு.
முத்தித் தலம் : கீழைத்தஞ்சாவூர்.

கோவில் அருகே ராமயண காவியத்துடன் தொடர்பு உடைய இதிகாசக் கோவில் உள்ளது. பஞ்ச பாண்டவர்கள் தங்கள் வனவாசத்தின் போது வணங்கிய பஞ்ச லிங்கேஸ்வரர்கள் , ஸ்ரீராமர் வழிபட்ட அரிதான 32,64 பட்டை கொண்ட பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளன.

தல வரலாறு:

ஸ்ரீசெருத்துணை நாயனார்
சோழ நாட்டில் அவதாரம் செய்தவர். சிறந்த சிவபக்தர். தஞ்சாவூர்  தலத்தில் வீரமிகும் வேளாண் மரபில் அவதாரம் செய்தவர். இவரது  தூய வெண்ணீற்று உள்ளத்தில் எழுகின்ற உணர்வுகளை எல்லாம் எம்பெருமான் பாதகமலங்களின் மீது செலுத்தினார். சிவனடியார்களுக்கு அரும்பணியாற்றி வந்தார். அடியார்களுக்கு யாராகிலும் அறிந்தோ அறியாமலோ அபச்சாரம் செய்தால் உடனே அவர்களைக் தண்டிப்பார். திருவாரூர் தியாகேசப் பெருமானுக்கு அருந்தொண்டாற்றி வந்தார்.

ஒருமுறை ஸ்ரீ மூலநாதர் ஆலயத்து மண்டபத்தில் அமர்ந்திருந்தார் செருத்துணை நாயனார், ஆலய வழிபாட்டிற்காக வந்திருந்த பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய  பட்டத்து ராணி மண்டபத்தருகே கிடந்த பூவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். செருத்துணை நாயனார் அரசியாரின் செயலைக் கவனித்த செருத்துணை நாயனார் அரசியாயிற்றே என்று கூடப்  பார்க்காமல் அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக ராணியாரை இழுத்துக் கீழே தள்ளி வாளால் மூக்கை சீவிவிட்டார். அங்கு வந்த அரசரிடம் நடந்தவற்றைப் விளக்கினார்.

ஆண்டவன் மீது அடியார் காட்டும் பக்தியைக் கண்டு அரசன் தலைவணங்கினான். சிவபெருமான்  பக்திக்குத் தலைவணங்கி, அரசர்க்கும், அரசிக்கும், செருத்துணை நாயனார்க்கும் அருள் செய்தார். திருத்தொண்டுகள் பல புரிந்து செருத்துணை நாயனார் எம்பெருமானின் திருவடி நீழலில் ஒன்றினார்.

கோவில் அமைப்பு:

சுவாமி கோயிலுக்கு முன்பு பக்கத்தில் செருத்துணை நாயனார் சந்நிதியுள்ளது. திருச்சுற்றில் மகாலட்சுமி, பைரவர், சந்திரன், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன. கோயிலின் இருபுறமும் குளங்கள் உள்ளன.

சிறப்புக்கள் :

ஸ்ரீசெருத்துணை நாயனாரின் அவதார மற்றும் முக்தித்தலம்.

போன்:  -

-

அமைவிடம் மாநிலம் :

தமிழ் நாடு

திருவாரூர் - திருமருகல் - (வழி) கங்களாஞ்சேரி - திருப்பயத்தங்குடி வழியாக புத்தகரம் பாலம் அடைந்து கீழத் தஞ்சாவூரை அடையலாம். திருவாரூர் - திருமருகல் நகரப் பேருந்தில் வந்து கீழத்தஞ்சை பாலம் நிறுத்தத்திலிருந்து நடந்து சென்று ஊரையடையலாம்.


ஸ்ரீசெருத்துணை நாயனாரின் அவதார மற்றும் முக்தித்தலம்.

இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும். 143வது தேவார வைப்புத்தலம்.

பல்லவப் பேரரசன் காடவர்கோன் கழற்சிங்கனுடைய  பட்டத்து ராணி அர்ச்சனைக்குரிய மலர்களை முகர்ந்து பார்த்த குற்றத்திற்காக ராணியாரை இழுத்துக் கீழே தள்ளி, செருத்துணை நாயனார் வாளால் பட்டத்து ராணியின் மூக்கை சீவிவிட்டார்.